உன்மத்த சிறுக்கியவள்
ஒய்யார அழகியே
உன்மத்த சிறுக்கியே
கண்டாங்கி புடவைகட்டி
எனை களவு கொண்டவளே
ஓரக்கண் பார்வையால
உயிருக்குள் உறைஞ்சவளே
உன் வனப்ப பார்த்துவிட்டால்
கற்சிலையும் சிலாக்கிகுமடி
உன் கண்ணழகை கண்டுவிட்டால்
கயல்கூட நாணுமடி
நீ வச்ச பூவுக்கு
விலைமதிப்பே இல்லையடி
நீ தீண்டாத பூவெல்லாம்
தற்கொலைக்கு துடிக்குதடி
நீ தொடுத்த பூச்சரங்கள்
சாகாவரம் பெற்றதடி
உன் கை பட்டதால
கதவு கம்பி நெகிழுதடி
கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்
மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி
இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த
என் கற்புநெறி தகருதடி
காதலோடு உனைபார்த்தால்
ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்
திரையில் நீ தோன்றினால் போதும்
அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது
உன் வீட்டு கதவை தட்டும்
கடவுள் என் எதிரில் வந்தால்
உன் கொண்டையில ஒரு பூவாகவோ
கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ
காது லோலாக்கில ஒரு மணியாகவோ
உடனே மாற வரம் கேட்பேன்
தர மறுத்தால்
வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..
கிராமிய நடைபோட்டு அழகியல் வீதியில் பயணிக்கும் கவிதை அருமை நண்பா... வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழன்னையின் பாலருந்தி வளர்ந்தவனே
ReplyDeleteஅவளின் தாலாட்டில் உளமகிழ்ந்து உறங்கியவனே
உன் தமிழ் மழையின் இச்சிறு துளியே
தமிழ் மண்ணின் மணத்தை இப்புவியில்
பரப்பியது என்றால்........................!!!??
வணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteகவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு நண்பரே!
ReplyDeleteவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு