Wednesday, February 24, 2010

இன்றேனும் சொல்லிவிடு

உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !

உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !

உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !

போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!

போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
புரிந்துகொள்

நீ என் உயிர் என கூறி
உனை மட்டப்படுத்த மனமில்லை
ஆனால் நீ பிரிந்தால்
நான் பிணம் என்பதை மட்டும்
புரிந்துகொள்....
உட்பூசல்

பெண்ணே
நட்பெனும் போர்வை போர்த்தி
நாம் இருவரும்
நாகரீகமாய் நடித்தோம்
நட்பல்ல என்பது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
யார் உடைவது
என்பதில் தான்
நமக்குள் உட்பூசல்!!

Monday, February 15, 2010

என்னவள்..

நிழல் சுமக்கும் பூமி போல்
சலிக்காமல் சுமந்து திரிகிறாய்
எனக்கான காதலை..