Tuesday, July 7, 2026

 இன்று நான் ரசித்தது திரு. போகன் சங்கர் அவர்களின் கவிதையை. இதோ உங்களுக்கும்...



Monday, July 6, 2026

 

எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்க முடியுமா?

எழுதுவதற்கு எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதுவது எழுத்துக்கு இழைக்கும் தீங்கு. ஆனால் பல நேரங்களில் அப்படித்தான் நடந்து விடுகிறது. காரணம், சிலவற்றையாவது எழுதியே தீர வேண்டும் என்ற பிடிவாதம். மேலும் நேரத்தை பயனுள்ளபடி செலவழிக்க இது சிறந்த வழி என்ற நம்பிக்கையும் காரணமாகிறது.


என்ன எழுதுவது என்ற கேள்விக்கே இடம் தராமல், மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தாக்குவது ஒரு கடினமான கலை. எண்ணத்தின் வேகத்திற்கு எழுத்தால் ஒரு சதவீதம் கூட ஈடு கொடுக்க இயலாது. எண்ணங்கள் லட்சக்கணக்கில் தோன்றி கணப்பொழுதில் மறைகின்றன அல்லது மாறுகின்றன. அவை எல்லாம் ஒரே எண்ணமோ என்றும் தோன்றுகிறது. தொடர்ச்சியாக வேறு வேறு வடிவம் கொண்டு அல்லது பின்னிப் பின்னி எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இயலாத காரியம். அதற்கான பல்வேறு வழிமுறைகளை முன்னோர்களும் பெரியவர்களும் சொன்னாலும், அவை பெரும்பாலோர்க்கு கடினமாகிறது.


எண்ணங்களை உற்று நோக்குதல் பலராலும் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளில் ஒன்று. ஆனால் பார்க்கும் போதே எண்ணங்கள் மாறுகின்றன அல்லது மறைந்து வேறு எண்ணங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. எண்ணங்களை எழுதி வைக்க முயற்சிக்கையில், அவை அதன் வேகம் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு வாக்கியம் தொடங்கும் போது இருக்கும் எண்ணமும், முடியும் போது இருக்கும் எண்ணமும் முற்றிலும் வேறுபட்டதாகிறது. அப்படியே எழுத்தாக்கினால், வாக்கியத்தின் அமைப்பே முறையற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் மாறிவிடுகிறது. சிந்தனையும் தெளிவற்றதாகிறது.


மனமற்ற நிலையே முக்தி என்கின்றனர் சித்தர்கள். ஆனால் மனதைக் கடத்தல் இந்த வியாபார, பொழுதுபோக்கு, ஜனரஞ்சக சமூகத்தில் இயலாது. எதை நோக்கி சிந்தனை சென்றுகொண்டிருக்கிறது என்று சர்வ நிச்சயமாய் தெரியவில்லை. எண்ணங்களுக்கு இளைப்பாறல் இல்லை போலும். ஒரு கணம் கூட மனம் முழுமையாகப் பிடிபடவில்லை.


எப்படியும் அவற்றை எழுதிவிட வேண்டும் என முயல்கையில், அவை முகமூடி அணிந்து கொண்டு வேறு எண்ணங்களை தோற்றுவித்து, பின்னால் மறைந்து கொள்கின்றன. எண்ணங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் இருக்கிறான். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணங்களே தீர்மானிக்கின்றன. அடுத்த நொடி அவை என்ன செய்யப் போகின்றன என்பதை எவரும் அறியார். உயிர் உள்ளவரை எண்ணங்களும் எழுந்துகொண்டே இருக்கும். மொழிக்கும் எண்ணத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.


எதையாவது எழுதுவதல்ல நோக்கம்; எண்ணத்தை எழுத்தாக்கும் முயற்சி. ஆனால் வழக்கம் போல் தோல்வியே.


Sunday, July 5, 2026

 நான் மிகவும் விரும்பி வாசிக்கும்.. திரு கல்யான்ஜி அவர்களின் கவிதையை இன்று (6/7/2026)  ரசித்து மகிழ்ந்தேன்.. இதோ... அக்கவிதை..



Saturday, July 4, 2026

                     இன்று (04.07.2026) நான் வாசித்து நேசித்த கவிதை:




Monday, September 15, 2014

தீபாவளி கவிதைப்போட்டி 2014


உன்மத்த சிறுக்கியவள்

 

ஒய்யார அழகியே

உன்மத்த சிறுக்கியே

கண்டாங்கி புடவைகட்டி

எனை களவு கொண்டவளே

ஓரக்கண் பார்வையால

உயிருக்குள் உறைஞ்சவளே

 

உன் வனப்ப பார்த்துவிட்டால்

கற்சிலையும் சிலாக்கிகுமடி

உன் கண்ணழகை கண்டுவிட்டால்

கயல்கூட நாணுமடி

 

நீ வச்ச பூவுக்கு

விலைமதிப்பே இல்லையடி

நீ தீண்டாத பூவெல்லாம்

தற்கொலைக்கு துடிக்குதடி

 

நீ தொடுத்த பூச்சரங்கள்

சாகாவரம் பெற்றதடி

உன் கை பட்டதால

கதவு கம்பி நெகிழுதடி

 

கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்

மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி

இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த

என் கற்புநெறி தகருதடி

 

காதலோடு உனைபார்த்தால்

ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்

திரையில் நீ தோன்றினால் போதும்

அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது

உன் வீட்டு கதவை தட்டும்

 

கடவுள் என் எதிரில் வந்தால்

உன் கொண்டையில ஒரு பூவாகவோ

கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ

காது லோலாக்கில ஒரு மணியாகவோ

உடனே மாற வரம் கேட்பேன்

தர மறுத்தால்

வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..

சிதையும் சமூகம்


கான்கிரீட் காடுகளாய்

பரந்து விரிந்து கொண்டிருக்கும்

பெருநகரங்களினூடே

சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது

கொஞ்சூண்டு மிச்சமிருக்கும்

செழுமையும் பசுமையும்...

 

பணத்திற்கும் பதவிக்கும்

பேயாய் பறக்கும் சில நபர்களிடம்

பொருளிழந்த வார்த்தைகளாய்

வலம் வருகின்றன

பகுத்தறிவும் சுயமரியாதையும்...

 

உடலிச்சைக்கு

இளந்தளிர்களை உருகுலைக்கும்

கயவர்களின் செயலால்

கல்லறைக்கு செல்கின்றன

நாகரீகமும் பண்பாடும்...

 

உயிர் வாழ்தல் பொருட்டு

எதிரியின் கால்நக்கும்

நயவஞ்சக கருநாக்குகளால்

வீழ்ந்து கிடக்கின்றன

வீரமும் விவேகமும்

 

தான்தோன்றித்தனமாய்

தலைஅறுபட்ட கோழியாய்

தறிகெட்டு ஓடும் இச்சமுதாயத்தில்

ஒரு கவிதை அழுகிறது

அருகிப்போன மனிதத்தன்மைக்கும்

கருகிப்போன தென்றலுக்குமாய்...

Friday, December 9, 2011

முல்லைப்பெரியாறு - பிரச்சனையும் தீர்வும்

முல்லைப்பெரியாறு – உண்மை நிலை
தமிழக-கேரள எல்லை பகுதியில் தீப்பற்றி எறிந்து கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு அணை யாருக்கு தான் சொந்தம்..? கேரள எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அணைக்கு தமிழகம் உரிமை கோருவது நியாயம் தானா..? தமிழர்கள் பலருக்கே எழுந்துள்ள இதுபோன்ற கேள்விகளுக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்தும் அதன் வரலாறு குறித்தம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள “முல்லைப்பெரியாறு பிரச்சனையும் தீர்வும்” என்ற ஒர் ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது. அவர்களுக்கு எம்நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

ஆவணப்படத்தை காண இங்கே சொடுக்கவும்

இயலுமெனில், சக தோழர்களுக்கும் அனுப்பி தமிழ் நாட்டின் நிலையை உணர்த்துவீர்