Tuesday, July 7, 2026

 இன்று நான் ரசித்தது திரு. போகன் சங்கர் அவர்களின் கவிதையை. இதோ உங்களுக்கும்...



Monday, July 6, 2026

 

எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்க முடியுமா?

எழுதுவதற்கு எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதுவது எழுத்துக்கு இழைக்கும் தீங்கு. ஆனால் பல நேரங்களில் அப்படித்தான் நடந்து விடுகிறது. காரணம், சிலவற்றையாவது எழுதியே தீர வேண்டும் என்ற பிடிவாதம். மேலும் நேரத்தை பயனுள்ளபடி செலவழிக்க இது சிறந்த வழி என்ற நம்பிக்கையும் காரணமாகிறது.


என்ன எழுதுவது என்ற கேள்விக்கே இடம் தராமல், மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தாக்குவது ஒரு கடினமான கலை. எண்ணத்தின் வேகத்திற்கு எழுத்தால் ஒரு சதவீதம் கூட ஈடு கொடுக்க இயலாது. எண்ணங்கள் லட்சக்கணக்கில் தோன்றி கணப்பொழுதில் மறைகின்றன அல்லது மாறுகின்றன. அவை எல்லாம் ஒரே எண்ணமோ என்றும் தோன்றுகிறது. தொடர்ச்சியாக வேறு வேறு வடிவம் கொண்டு அல்லது பின்னிப் பின்னி எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இயலாத காரியம். அதற்கான பல்வேறு வழிமுறைகளை முன்னோர்களும் பெரியவர்களும் சொன்னாலும், அவை பெரும்பாலோர்க்கு கடினமாகிறது.


எண்ணங்களை உற்று நோக்குதல் பலராலும் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளில் ஒன்று. ஆனால் பார்க்கும் போதே எண்ணங்கள் மாறுகின்றன அல்லது மறைந்து வேறு எண்ணங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. எண்ணங்களை எழுதி வைக்க முயற்சிக்கையில், அவை அதன் வேகம் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு வாக்கியம் தொடங்கும் போது இருக்கும் எண்ணமும், முடியும் போது இருக்கும் எண்ணமும் முற்றிலும் வேறுபட்டதாகிறது. அப்படியே எழுத்தாக்கினால், வாக்கியத்தின் அமைப்பே முறையற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் மாறிவிடுகிறது. சிந்தனையும் தெளிவற்றதாகிறது.


மனமற்ற நிலையே முக்தி என்கின்றனர் சித்தர்கள். ஆனால் மனதைக் கடத்தல் இந்த வியாபார, பொழுதுபோக்கு, ஜனரஞ்சக சமூகத்தில் இயலாது. எதை நோக்கி சிந்தனை சென்றுகொண்டிருக்கிறது என்று சர்வ நிச்சயமாய் தெரியவில்லை. எண்ணங்களுக்கு இளைப்பாறல் இல்லை போலும். ஒரு கணம் கூட மனம் முழுமையாகப் பிடிபடவில்லை.


எப்படியும் அவற்றை எழுதிவிட வேண்டும் என முயல்கையில், அவை முகமூடி அணிந்து கொண்டு வேறு எண்ணங்களை தோற்றுவித்து, பின்னால் மறைந்து கொள்கின்றன. எண்ணங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் இருக்கிறான். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணங்களே தீர்மானிக்கின்றன. அடுத்த நொடி அவை என்ன செய்யப் போகின்றன என்பதை எவரும் அறியார். உயிர் உள்ளவரை எண்ணங்களும் எழுந்துகொண்டே இருக்கும். மொழிக்கும் எண்ணத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.


எதையாவது எழுதுவதல்ல நோக்கம்; எண்ணத்தை எழுத்தாக்கும் முயற்சி. ஆனால் வழக்கம் போல் தோல்வியே.


Sunday, July 5, 2026

 நான் மிகவும் விரும்பி வாசிக்கும்.. திரு கல்யான்ஜி அவர்களின் கவிதையை இன்று (6/7/2026)  ரசித்து மகிழ்ந்தேன்.. இதோ... அக்கவிதை..



Saturday, July 4, 2026

                     இன்று (04.07.2026) நான் வாசித்து நேசித்த கவிதை: