Tuesday, May 25, 2010

கடவுள் ஏன் கல்லானான்




கண் மூடி தியானிக்கையில்
கடவுள் வந்தமர்ந்தார் என் மனதில்
என்னுள் எழுந்த கேள்விக்கு
உவப்புடனே பதில் தந்தார்
இனிய தமிழில்

மண்மீது தான் படைத்த உயிர்களிலே
மனிதன் மட்டும் பாதை மாறி போனதாலே
கண்கொண்டு பார்க்க சகிக்காமல்
கல்லாகி போனதாக கடவுள் சொன்னார்

சாதிமத பேதத்தின் அடிப்படையில்
சமமற்ற சமுதாய செயல்கள் கண்டு
கல்லாய் சமைந்ததாய் சாமி சொன்னார்

காவிதறித்த சில கயவர்களின்
கருங்காலித்தனம் கண்டு
கற்சிலையாய் போனதாக சங்கடப்பட்டார்

தான் அருளிச்செய்த தீந்தமிழில்
அர்ச்சனை செய்யாத அறிவிலிக்கு
அருள்பாலிக்க மனமின்றி
கல்லாய்ப் போனதாக ஆதங்கப்பட்டார்

மனித வாழ்வின் ஆதாரமாய்
தான் அமைத்திட்ட இயற்கை வளத்தினை
மனிதன் அழித்தொழிக்க முற்படும்
அவலநிலையினை
தனக்கு தானே தோண்டிக்கொள்ளும்
சவக்குழியினை
காணும் சக்கியற்று
கல்லாகி போனதாக
கதைத்து விடைப்பெற்றார் கடவுள்;

அன்பையும் அமைதியையும் நோக்கி
மனித மனங்களை ஆற்றுப்படுத்துவோம்
கறையற்ற மானுட சமூகம் கண்டு
கல்லிருந்து கடவுளை மீட்டெடுப்போம்..

Thursday, April 8, 2010

எனது படைப்பு


“தொங்குபாலம்”
(ஒரு சிறுகதை தொகுப்பு)

Wednesday, February 24, 2010

இன்றேனும் சொல்லிவிடு

உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !

உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !

உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !

போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!

போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
புரிந்துகொள்

நீ என் உயிர் என கூறி
உனை மட்டப்படுத்த மனமில்லை
ஆனால் நீ பிரிந்தால்
நான் பிணம் என்பதை மட்டும்
புரிந்துகொள்....
உட்பூசல்

பெண்ணே
நட்பெனும் போர்வை போர்த்தி
நாம் இருவரும்
நாகரீகமாய் நடித்தோம்
நட்பல்ல என்பது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
யார் உடைவது
என்பதில் தான்
நமக்குள் உட்பூசல்!!

Monday, February 15, 2010

என்னவள்..

நிழல் சுமக்கும் பூமி போல்
சலிக்காமல் சுமந்து திரிகிறாய்
எனக்கான காதலை..

Thursday, January 14, 2010

மரிக்கொழுந்தே! (உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)


எனை இம்சிக்க பிறந்தவளே
சிந்திய உன் பார்வைக்கே நான்
சின்னாபிண்ணமானேனடி
மிஞ்சி நீ பேசியிருந்தா
என் வம்சமே உனக்கடிமையென
கையெழுத்து இட்டிருப்பேனடி

பொல்லாத பார்வை பார்த்து
பொடிப்பொடியாக்கிட்ட
மல்லாக்க போடப்பட்ட
ஆமை போல மாத்திட்ட!

என் உசிர உறிஞ்சிட்டு
நடைபிணமா அணுப்பி வச்ச
செப்படி வித்தயில்லாம எனை
இறக்கையின்றி பறக்க வச்ச

கவிதை என்ன எழுதவச்ச
கற்பூர வாசத்தை
கழுதைக்கே தெரிய வச்சே

என் இனிய உயிர்திண்ணியே
இங்;கீலிசு முத்தம் வேணாம்
இதமான ஒரு பார்வை போதும்
எனகேதும் தரணுமுன்னா
உன் நிழல் மேல என் நிழல
சுருட்டி வைக்க ஒரு
வரம் தரியா

நீ இருக்கும் திசை நோக்கி
என் காத்த அனுப்பி வைப்பேன்
சுவாசிச்சி திருப்பி அணுப்பு
அதுவரைக்கும்
என் மூச்சை நிறுத்திவைப்பேன் !
கனவுக்கு பலமுண்டு
நெசந்தான்..
ஆனால் உன் கனவில்
நானுண்டா
உண்டுண்ணா உண்மையை சொல்லு
இல்லைண்ணா உயிர்காக்க
ஒரு பொய்யாவது சொல்லு!