Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, January 14, 2010

மரிக்கொழுந்தே! (உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)


எனை இம்சிக்க பிறந்தவளே
சிந்திய உன் பார்வைக்கே நான்
சின்னாபிண்ணமானேனடி
மிஞ்சி நீ பேசியிருந்தா
என் வம்சமே உனக்கடிமையென
கையெழுத்து இட்டிருப்பேனடி

பொல்லாத பார்வை பார்த்து
பொடிப்பொடியாக்கிட்ட
மல்லாக்க போடப்பட்ட
ஆமை போல மாத்திட்ட!

என் உசிர உறிஞ்சிட்டு
நடைபிணமா அணுப்பி வச்ச
செப்படி வித்தயில்லாம எனை
இறக்கையின்றி பறக்க வச்ச

கவிதை என்ன எழுதவச்ச
கற்பூர வாசத்தை
கழுதைக்கே தெரிய வச்சே

என் இனிய உயிர்திண்ணியே
இங்;கீலிசு முத்தம் வேணாம்
இதமான ஒரு பார்வை போதும்
எனகேதும் தரணுமுன்னா
உன் நிழல் மேல என் நிழல
சுருட்டி வைக்க ஒரு
வரம் தரியா

நீ இருக்கும் திசை நோக்கி
என் காத்த அனுப்பி வைப்பேன்
சுவாசிச்சி திருப்பி அணுப்பு
அதுவரைக்கும்
என் மூச்சை நிறுத்திவைப்பேன் !
கனவுக்கு பலமுண்டு
நெசந்தான்..
ஆனால் உன் கனவில்
நானுண்டா
உண்டுண்ணா உண்மையை சொல்லு
இல்லைண்ணா உயிர்காக்க
ஒரு பொய்யாவது சொல்லு!