உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !
உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !
உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !
போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!
போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
"நடமாடும் பிணமாய் இருப்பதில்
ReplyDeleteநாட்டமில்லை எனக்கு"
அருமையான வரிகள். . .
வாழ்த்துக்கள் தோழா
வாழ்த்திய இதயங்களுக்கு நன்றி..
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/11/b.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.