Tuesday, May 25, 2010

கடவுள் ஏன் கல்லானான்




கண் மூடி தியானிக்கையில்
கடவுள் வந்தமர்ந்தார் என் மனதில்
என்னுள் எழுந்த கேள்விக்கு
உவப்புடனே பதில் தந்தார்
இனிய தமிழில்

மண்மீது தான் படைத்த உயிர்களிலே
மனிதன் மட்டும் பாதை மாறி போனதாலே
கண்கொண்டு பார்க்க சகிக்காமல்
கல்லாகி போனதாக கடவுள் சொன்னார்

சாதிமத பேதத்தின் அடிப்படையில்
சமமற்ற சமுதாய செயல்கள் கண்டு
கல்லாய் சமைந்ததாய் சாமி சொன்னார்

காவிதறித்த சில கயவர்களின்
கருங்காலித்தனம் கண்டு
கற்சிலையாய் போனதாக சங்கடப்பட்டார்

தான் அருளிச்செய்த தீந்தமிழில்
அர்ச்சனை செய்யாத அறிவிலிக்கு
அருள்பாலிக்க மனமின்றி
கல்லாய்ப் போனதாக ஆதங்கப்பட்டார்

மனித வாழ்வின் ஆதாரமாய்
தான் அமைத்திட்ட இயற்கை வளத்தினை
மனிதன் அழித்தொழிக்க முற்படும்
அவலநிலையினை
தனக்கு தானே தோண்டிக்கொள்ளும்
சவக்குழியினை
காணும் சக்கியற்று
கல்லாகி போனதாக
கதைத்து விடைப்பெற்றார் கடவுள்;

அன்பையும் அமைதியையும் நோக்கி
மனித மனங்களை ஆற்றுப்படுத்துவோம்
கறையற்ற மானுட சமூகம் கண்டு
கல்லிருந்து கடவுளை மீட்டெடுப்போம்..

1 comment:

  1. nanba... kavithaiya padichitu appadiye nan kallayetten..
    paaratukkal parpala...

    ReplyDelete